Wednesday, June 3, 2009

ஓர் துயரச் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

பாவட்டகுடியை சேர்ந்த ஹாஜி முகமது நேற்று ஒரு சாலை விபத்தில் வபாத் ஆனார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம், அவரது நல்லடக்கம் இன்று காலை நடை பெரும். அனைவரும் துவா செய்வோமாக.........


வருத்தத்துடன் ,

நியாஸ் அஹமது , துபாய்
பாவட்டகுடி

Tuesday, June 2, 2009

இரவு நேரம்



என்
ஓட்டைக் குடிசைக்குள்
நிலவின்
ஒளிபுகும் நேரமெல்லாம்
நான்
ஏட்டைக் கையில் பிடித்து
தமிழ்ப்
பாட்டை எழுதிக்கொண்டிருப்பேன்!

தனிமை
எனக்கு இனிமையானது!
தனிமைதான் எனக்குள்
தமிழ் சுரக்கும் நேரம்!

உலகம் உறங்கும் நேரம்
எனக்கு
உறக்கம் கலையும் நேரம்!
இரவுகளைக்கூட
உறங்க விடாது
நான்
கவிதைகளை பிரசவிக்கும்
களிப்பான நேரம்!

பகலில் உடைபட்ட
என்
உணர்ச்சிக் குமிழிகளை
இரவில்
கற்பனை ஊசியால்
கவிதை நூல் கொண்டு
தைக்கும் நேரம்!